இந்தியா
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி 31ம் தேதி அமலாத்துறையால் கைது செய்யப்பட்டார்.
அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் உயர்நீதிமன்றத்தை நாடினார். ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம், இன்று ( ஜூன் 28) ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)