சினிமா
நடிகை யாஷிகாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு. என்ன நடந்தது?
நடிகை யாஷிகா கடந்த 2021-ம் ஆண்டு இசிஆர் அருகே நண்பர்களுடன் காரில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி உயிரிழந்தார்.
இதையடுத்து நடிகை யாஷிகா ஆனந்த் மீது அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்ச்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மகாபலிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு யாஷிகா நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் விசாரணைக்கு அவர் ஆஜராகததால் செங்கல்பட்டு நீதிமன்றம் பிடிவாரெண்ட் உத்தரவிட்டுள்ளது.
You must be logged in to post a comment Login