Connect with us

Raj News Tamil

சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் ஏலம் விடப்படும் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

தமிழகம்

சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் ஏலம் விடப்படும் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கு அடையாள சிப் பொருத்தப்படுவதோடு, ஒரே மாடு மூன்றாவது முறை பிடிக்கப்பட்டால் அந்த மாடு ஏலம் விடப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி கடந்த 2023-ம் ஆண்டு 4 ஆயிரத்து 237 மாடுகள் பிடிக்கப்பட்டு, சுமார் 92 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை 1,212 மாடுகள் பிடிக்கப்பட்டு 43 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் முதல்முறை பிடிபட்டால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், இரண்டாவது முறை பிடிபட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் மாட்டின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top