தமிழகம்
சி.ஆர்.பி.எப். வீரரிடம் செல்போனை பறித்து சென்ற மர்மநபர்
ஆவடி மேற்கு காந்தி நகர் நாசர் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 64). இவர் நேற்று காலை திருவண்ணாமலை செல்வதற்காக ஆவடி பஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த இருவர் விஜயகுமாரின் பாக்கெட்டில் இருந்த 2 செல்போன்களை பறித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
அதே வழியில் சாலையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த ஓய்வு பெற்ற சி.ஆர்.பி.எப். வீரரான கலையரசன் (65) என்பவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login