வானிலை
அடுத்த 24 மணி நேரத்தில் புயல்…எச்சரிக்கை கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!!
அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் என்றம இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 3 நாட்களுக்குள் கேரளா, தெற்கு கர்நாடகாவின் உள்பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
You must be logged in to post a comment Login