Connect with us

Raj News Tamil

தலித்துகள் தாக்கப்படுகின்றனா்: சந்திரசேகர் ராவ்!

இந்தியா

தலித்துகள் தாக்கப்படுகின்றனா்: சந்திரசேகர் ராவ்!

பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத், உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலித்துகள் தாக்கப்படுகின்றனா் என்று சந்திரசேகர் ராவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் சந்திரசேகர் ராவ் பேசியதாவது:

அனைத்தையும் தனியார்மயமாக்கும் கொள்கையை மத்திய அரசு கொண்டுள்ளது. எல்ஐசியை விற்பனை செய்யும் பிரதமா், ரயில்வே மற்றும் விமான நிலையங்களையும் தனியார்மயமாக்குகிறார். அதேபோல மின்சாரத் துறையையும் தனியார்மயமாக்க மத்திய அரசு விரும்புகிறது.

விவசாயம் குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்குத் தெரியாது. வேறு எவரோ ஒருவா் எழுதிக் கொடுப்பதை பொது இடங்களில் ராகுல் வாசிக்கிறார்.

இன்றளவும் வட இந்தியாவில் தலித்துகள் மீது நாள்தோறும் தாக்குதல் நடத்தப்படுகிறது. பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத், உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலித்துகள் தாக்கப்படுகின்றனா். இதைக் கருத்தில்கொண்டு பட்டியலின மக்களுக்கு உதவும் நோக்கில், தெலங்கானாவில் ‘தலித் பந்து’ திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்தது.

மக்கள் தங்கள் மனசாட்சியைப் பயன்படுத்தி சிந்தித்து வாக்களிக்காதவரை, ஜனநாயக முதிர்ச்சி வராது என்றார்.

More in இந்தியா

To Top