தேர்தல் 2024
தலித்துகள், பழங்குடியினர் மீண்டும் அடிமைகளாக மாறுவார்கள் : மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை
மகாராஷ்டிரா மாநிலம் துலே தொகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் “சுதந்திரத்திற்கு முன்பு, ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் அடிமைகளை போல நடத்தப்பட்டனர்.
மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால் இதே நிலைதான் மீண்டும் வரும். உங்கள் நலனுக்காகவும், உங்கள் சொந்த மக்களுக்காகவும் நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
அரசியலமைப்பு சட்டம் இல்லையென்றால், உங்களை காப்பாற்ற யாரும் இருக்கமாட்டார்கள். அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் 2015-ல் கூறியிருந்தார்.
வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்பதாக மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)