Connect with us

Raj News Tamil

நாட்டில் ஜனநாயகத்துக்கு ஆபத்து: மல்லிகார்ஜுன கார்கே!

இந்தியா

நாட்டில் ஜனநாயகத்துக்கு ஆபத்து: மல்லிகார்ஜுன கார்கே!

நாட்டில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக மல்லிகார்ஜுன கார்கே கருப்பு அறிக்கையை வெளிட்டு கூறுகையில்,

“இன்று நாங்கள் அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கையை கொண்டு வந்துள்ளோம். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும் போது எல்லாம் தனது அரசின் தோல்விகளை மறைக்கிறார். அதேநேரத்தில் நாங்கள் அரசின் தோல்வி குறித்து பேசும் போதெல்லாம் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால் கருப்பு அறிக்கை வெளியிட்டு மோடி அரசின் தோல்விகளை மக்களுக்கு எடுத்துக்கூறுகிறோம். நாட்டில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவால் 411 எம்எல்ஏகள் வாங்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல காங்கிரஸ் அரசுகளை கவிழ்த்துள்ளனர். அவர்கள் ஜனநாயகத்தை அழிக்கிறார்கள்” என்றார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top