Connect with us

Raj News Tamil

24,000 கனஅடி நீரை திறந்துவிட கோரிக்கை வைக்க முடிவு: துரைமுருகன்!

தமிழகம்

24,000 கனஅடி நீரை திறந்துவிட கோரிக்கை வைக்க முடிவு: துரைமுருகன்!

காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தப்படும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று ஆணையம் கூறியது போதாது. 45 டிஎம்சி நிலுவை தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்து விட ஆணையத்தில் வலியுறுத்தப்படும். தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீர் கிடைத்தால்தான் நன்றாக இருக்கும். தமிழ்நாட்டின் கோரிக்கையை நீர்வளத்துறை செயலாளர் கூட்டத்தில் வலியுறுத்துவார் . என தெரிவித்தார்.

More in தமிழகம்

To Top