Connect with us

Raj News Tamil

கர்ப்பம் அடைந்த தீபிகா படுகோன்! குழந்தை எப்போது பிறக்கும்? அறிவித்த தம்பதி!

சினிமா

கர்ப்பம் அடைந்த தீபிகா படுகோன்! குழந்தை எப்போது பிறக்கும்? அறிவித்த தம்பதி!

பாலிவுட்டில் ஸ்டார் தம்பதிகளாக இருப்பவர்கள் தீபிகா படுகோன் – ரன்வீர் சிங். நீண்ட நாள் காதலித்து வந்த இவர்கள், கடந்த 2018-ஆம் ஆண்டு அன்று திருமணம் செய்துக் கொண்டனர்.

இந்நிலையில், இந்த தம்பதி தங்களது சமூக வலைதளப் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கடைசியாக எங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறோம் என்று பதிவிட்டிருந்தனர்.

சோசியல் மீடியாவில் இந்த பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே, டிரெண்ட் ஆக ஆரம்பித்தது. மேலும், ரசிகர்களும், தங்களது வாழ்த்து மழையை பொழிய ஆரம்பித்தனர்.

முன்னதாக, பாஃப்டா விருது வழங்கும் விழாவில், நடிகை தீபிகா படுகோன் கலந்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது வயிறு லேசாக தொப்பையுடன் காணப்பட்டிருந்தது.

எப்போதும் ஃபிட்டாக இருக்கும் தீபிகா படுகோனின் உடல், இவ்வாறு இருப்பதை அறிந்தபோதே, அவர் கர்ப்பமாக இருப்பதாக சில நெட்டிசன்கள் யூகித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top