Connect with us

Raj News Tamil

6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி: பொதுமக்கள் அச்சம்!

தமிழகம்

6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி: பொதுமக்கள் அச்சம்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு சென்னையில் சிறுவன் உயிரிழந்த நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளிக்கு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு செய்யப்பட்டுள்ளது. வண்டிப்பாளையம், மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள், நெய்வேலி, முட்டத்தை சேர்ந்த 2 ஆண்கள், பண்ருட்டியை சேர்ந்த 2 பெண்கள் என மொத்தம் 6 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து 6 பேரும் மருத்துவமனையில் தனி வார்டில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top