Connect with us

Raj News Tamil

ரஜினிக்கு எழுதிய கதையில் சிம்புவா? விளக்கம் அளித்த தேசிங்கு பெரியசாமி!

சினிமா

ரஜினிக்கு எழுதிய கதையில் சிம்புவா? விளக்கம் அளித்த தேசிங்கு பெரியசாமி!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம், இயக்குநராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, இவர் ரஜினியை வைத்து, புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அந்த புராஜெக்ட் டேக் ஆஃப் ஆகாமல் போனது.

அதன்பிறகு, அதே கதையை சிம்புவை வைத்து, இயக்க இருப்பதாக, தகவல் வெளியானது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாமல் ரசிகர்கள் இருந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தேசிங்கு பெரியசாமி, ஆம், ரஜினி நடிக்க வேண்டிய கதையில் தான், சிம்பு நடிக்கிறார். அவருக்காக சில மாற்றங்கள், கதையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

More in சினிமா

To Top