அரசியல்
பிரதமரின் பாதுகாப்பில் எவ்வித குளறுபடிகள் இல்லை டிஜிபி சைலேந்திர பாபு..!
உலக நாடுகளின் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னை மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28 அன்று தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, டம்மி பாதுகாப்பு வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, பிரதமரின் பாதுகாப்பில் எவ்வித குளறுபடிகள் இல்லை பதிலளித்தார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் காவல்துறையின் அனைத்து உபகரணங்களும் முறையாக பரிசோதனை செய்யப்படுகிறது. அண்டை மாநிலங்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு உயர்தர பாதுகாப்பு உபகரணங்கள் நம்மிடம் உள்ளது எனக் கூறினார்.
You must be logged in to post a comment Login