Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

ப்ளாக் பஸ்டர் இயக்குநர் உடன் 3-வது முறையாக இணையும் தனுஷ்!

சினிமா

ப்ளாக் பஸ்டர் இயக்குநர் உடன் 3-வது முறையாக இணையும் தனுஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர், தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில், தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் தனுஷ், தன்னை வைத்து தொடர்ந்து இரண்டு படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநர் ஒருவருடன், 3-வது முறையாக இணைய உள்ளார். அதாவது, நடிகர் தனுஷ் முதன்முதலில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான படம் ராஞ்ஜனா. இந்த படத்தை, ஆனந்த் எல் ராய் என்பவர் இயக்கியிருந்தார்.

பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், பாலிவுட் சினிமாவில், தனுஷ்-க்கு தனி மார்கெட்டை உருவாக்கி கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பிறகு, அத்ரங்கி ரே என்ற படம், இந்த கூட்டணியின் மூலம் உருவாகி இருந்தது.

தனுஷ் உடன், சாரா அலி கான், அக்ஷய் குமார் ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படமும், நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தது.

இந்நிலையில், இந்த இயக்குநர் உடன், தனுஷ் மீண்டும் இணைய உள்ளார். இந்த படத்தின் டெஸ்ட் ஷீட் அனைத்தும் முடிந்துவிட்டது. படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top