பா.பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இந்த படத்திற்கு பிறகு, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய 2 படங்களை இயக்கி முடித்துள்ள இவர், தற்போது இட்லிக் கடை என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், நடிகர் தனுஷ் அடுத்ததாக, நடிகர் அஜித்தின் படத்தை இயக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. மேலும், இந்த படத்திற்கு, அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில், பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது, தற்போது வரை தெரியவில்லை. ஆனால், இது உண்மையாகும் பட்சத்தில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உரிய படமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.