சினிமா
லியோவில் இன்னொரு பெரிய ஹீரோவா? ரத்தினகுமார் வெளியிட்ட புகைப்படம்!
தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு, காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பில், இயக்குநர் ரத்தினகுமார் கலந்துக் கொண்டுள்ளார். இவ்வாறு இருக்க, இவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உடைந்த கண்ணாடியின் ஒரு பகுதியை கையில் வைத்துள்ளார்.
மேலும், Never Say Die என்ற வசனத்தையும் கேப்ஷனாக குறிப்பிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், இது ஏதோ குறியீடு என்று கண்டறிந்துள்ளனர்.
“விக்ரம் படத்தில் நடித்திருந்த விஜய்சேதுபதியின் கண்ணாடியும் இதேபோல் தான் இருக்கும். எனவே, இந்த படத்தில், விஜய்சேதுபதி நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதைத் தான் குறியீடாக ரத்னகுமார் கூறியுள்ளார்” – இவ்வாறு பல்வேறு கமெண்ட்ஸ்களை நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால், அதுதொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இது உண்மையா? அல்லது வெறும் யூகம் மட்டுமா என்பதற்கு, படக்குழு தான் விளக்கம் அளிக்க வேண்டும்..
You must be logged in to post a comment Login