மீண்டும் திருந்தாத ஷங்கர்! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், ஏழை எளிய மக்கள் தான் என்பது போன்ற காட்சிகளும், திருநங்கைகளை இழிவுப்படுத்தும் வகையான காட்சிகளும், இயக்குநர் ஷங்கரின் முந்தைய படங்களில் இருந்திருக்கின்றன.

இதனால், சமூக ஆர்வலர்கள் பலர், அவரது திரைப்படங்களை கடுமையாக விமர்சித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த வழக்கம், தற்போது வந்துள்ள இந்தியன் 2 படத்திலும் தொடர்ந்துள்ளது.

இந்த படத்தை பார்த்த நெட்டிசன்கள், தங்களது ஆதங்கங்களை கொட்டி தீர்த்துள்ளனர். அதாவது, இப்படத்திலும், திருநங்கைகளுக்கு எதிராகவும், ரவுடிகள் வடசென்னை பகுதிகளில் தான் உள்ளார்கள் என்றும், பொதுவான கருத்தை முன்வைத்திருக்கிறார்.

குறிப்பாக, இப்படத்தில் உள்ள ஒரு காட்சியில், துப்புரவு பணியாளரை பார்த்து நடிகர் ஜெகன் பேசும்போது, “அய்யா துப்புரவு தொழிலாளரே, காசு வாங்குறீங்கள்ல”என்று நக்கல் தோனியில் கேட்கிறார். இவ்வாறு அமைந்துள்ள காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள், தங்களது விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News