டான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இவர் கூட்டணி வைக்க இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், மற்ற படங்களில் பிசியாக இருப்பதால், சிவகார்த்திகேயனால், சிபி சக்கரவர்த்தியுடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை.
இவ்வாறு இருக்க, சிபி சக்கரவர்த்தியின் அடுத்த கட்ட திட்டம் குறித்து தகவல் கசிந்துள்ளது. அதாவது, இவர், தெலுங்கு நடிகர் நானியுடன் அடுத்ததாக இணைய உள்ளாராம். இப்படத்தை, மைத்ரி மூவிஸ் நிறுவனம் தான், தயாரிக்க உள்ளதாம்.