Connect with us

Raj News Tamil

ரூ.50,000-க்கும் கீழ் உள்ள வணிக வரி நிலுவை தள்ளுபடி: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகம்

ரூ.50,000-க்கும் கீழ் உள்ள வணிக வரி நிலுவை தள்ளுபடி: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ரூ.50,000-க்கும் கீழ் உள்ள தொகைக்கான வணிக வரி, வட்டி, அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: தமிழகத்தில் உள்ள வணிகர்கள், மற்றும் நிறுவனங்களுக்கும் வணிக வரித்துறைக்கும் இடையே உள்ள வரி நிலுவை மற்றும் வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வரவும், சிறு வணிகர்களின் நலனைக் காத்திடவும் தமிழக அரசு கொண்டு வரவிருக்கும் வரித் தொகையை வசூலிப்பதற்கான சமாதான திட்டத்தை இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.

வணிகர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை வசூலிக்க சமாதான திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.25,000 கோடி அளவுக்கு வணிக வரி வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில்தான், நிலுவைத் தொகை செலுத்துவதில் சலுகை வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை வைத்தனர். இதனடிப்படையில் சமாதானத் திட்டம் கொண்டுவரப்பட்டுளள்து.

இந்த திட்டத்தின்படி, வரிமதிப்பீட்டு ஆண்டில், ரூ.50 ஆயிரத்துக்கும் கீழ் உள்ள வணிக வரி, வட்டி, அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் 95,000 வணிகர்கள் பயன்பெறுவார்கள் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

ஒவ்வொரு வரி மதிப்பீட்டு ஆண்டிலும், வரி, வட்டி, அபராதத் தொகை என வணிக வரி ரூ.50,000க்கு உள்பட்டு இருந்தால், வணிக வரி முற்றிலும் விலக்கு அளிக்கப்படும். தமிழகத்தின் வரலாற்றில், சிறு வணிகர்களுக்கு இவ்வாறு முழு வணிக வரி தள்ளுபடி செய்யப்படுவது இதுதான் முதன்முறை என்றும் ஸ்டாலின் கூறினார்.

More in தமிழகம்

To Top