Connect with us

Raj News Tamil

ஓபிஎஸ் மனு தள்ளுபடி; அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்: உயர்நீதிமன்றம்!

தமிழகம்

ஓபிஎஸ் மனு தள்ளுபடி; அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்: உயர்நீதிமன்றம்!

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கிய சிறப்பு தீர்மானத்தை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது 7 நாள் விவாதத்திற்கு பின் ஜூலை 28 ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கிய சிறப்பு தீர்மானத்துக்கு தடை விதிக்க முடியாது. கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை நீக்கியது செல்லும் என்று வெள்ளிக்கிழமை (ஆக.25) உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீட்டு மனுக்கள் நிலைக்கத்தக்கதல்ல, வழக்கில் தடை விதிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதித்தால் கட்சி செயல்படுவதில் பாதிப்பை ஏற்படுத்தும் என நீதிபதிள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

More in தமிழகம்

To Top