Connect with us

Raj News Tamil

தீபாவளி முன்பதிவு: சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்கள்!

தமிழகம்

தீபாவளி முன்பதிவு: சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்கள்!

தீபாவளி பண்டிகையையொட்டி முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது.

நிகழாண்டு தீபாவளி பண்டிகை அக்.31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பண்டிகைக்கு 2 நாள்கள் முன்பாக அக்.29-ஆம் தேதிக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு திங்கள்கிழமை தொடங்கி, விரைவாக விற்றுத்தீர்ந்தது.

இந்த நிலையில், அக். 30-ஆம் தேதிக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு இன்று(ஜூலை 2) தொடங்கிய நிலையில், 5 நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிவடைந்ததால், பயணிகள் பலர் ஏமாற்றமடைந்தனர்.

குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களுக்கு புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் 2 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்தது.

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் அக்.31-க்கான முன்பதிவு புதன்கிழமை (ஜூலை 3) தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top