Connect with us

Raj News Tamil

திமுக பெண் கவுன்சிலர் கொலை – அரை நிர்வாணத்துடன் சடலமாக மீட்பு

தமிழகம்

திமுக பெண் கவுன்சிலர் கொலை – அரை நிர்வாணத்துடன் சடலமாக மீட்பு

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா (42). இவரது கணவர் தங்கராசு கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். ரூபா ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலராக (திமுக) பொறுப்பில் உள்ளார்.

இவர் நேற்று வீட்டிலிருந்து புறப்பட்டு, கரூர் சென்ற அவர் இரவு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று கரூர் மாவட்டம், பவுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலை முருகன் கோவில் அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதி ஒன்றில் தலை நசுங்கிய நிலையில்,அரை நிர்வாணத்துடன் சடலமாக கிடந்துள்ளார்.

தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் க.பரமத்தி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரூபாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்த நபர் யார் என்பது குறித்து தடையவியல் நிபுணர்களை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More in தமிழகம்

To Top