கள்ளக்காதலியுடன் உல்லாசம்.. பரவிய வீடியோ.. திமுக நிர்வாகி தற்கொலை..

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் திவாகர். தடபெரும்பாக்கத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த இவர், திமுகவின் பொன்னோரி பகுதியின் இளைஞரணி அமைப்பாளராக இருந்து வந்தார். தனது மனைவி ரஞ்சனி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், திவாகருக்கும், முனிரத்தினா என்ற 22 வயது கொண்ட பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதுமட்டுமின்றி, அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு இருக்க, முனிரத்தினாவின் செல்போனில் இருந்த வீடியோவை, அவரது முன்னாள் காதலன், பார்த்துள்ளார். இந்த வீடியோவை வைத்து திவாகரிடம், 10 லட்சம் ரூபாய் கேட்டு, அவர் மிரட்டியுள்ளார். ஆனால், திவாகர் பணம் தர முடியாது என்று கூறியதால், அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, திவாகரை சந்தித்த முனிரத்தினாவின் தாய், “வீடியோ ஊர் முழுவதும் பரவி விட்டது.. எனவே என் மகளை நீ தான் திருமணம் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த திவாகர், தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முனிரத்தினாவின் முன்னாள் காதலன், முனிரத்தினா, அவரது தாய் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்து தலைமறைவான அவர்களை, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News