Connect with us

Raj News Tamil

பெண்ணின் தாலியை அறுத்து வீசிய திமுக பிரமுகர்

தமிழகம்

பெண்ணின் தாலியை அறுத்து வீசிய திமுக பிரமுகர்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மெயின் பஜார் வீதியை சேர்ந்தவர் காந்தி. இவருக்கு சொந்தமாக 7.45 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அணைக்கட்டு திமுக மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் என்பவர் அபகரித்து விட்டதாக காந்தி குடும்பத்தினர் வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகார் மனுவில், எங்களுக்கு சொந்தமான நிலத்தில் திமுக அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஜேசிபி மூலம் மண்ணை எடுத்து விற்பனை செய்து வருகிறார். இதை காந்தி குடும்பத்தினர் தட்டி கேட்டுள்ளனர்.

அப்போது கவிதா என்ற பெண்ணின் தாலியை அறுத்து வீசியுள்ளார். மேலும் அங்கிருந்த ஆட்களை வைத்து தாக்கி நில அபகரிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அடியாட்களை வைத்து குடும்பத்தையே கொன்று விடுவேன் என மிரட்டுகிறார்.

எங்களது நிலத்தின் பட்டா மற்றும் வரைபடம் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் புகார் மனு உடன் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளதாக புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழகம்

To Top