Connect with us

Raj News Tamil

அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

tamil news today

தமிழகம்

அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின், மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். இவருடைய மகள் பாரதி (55). இவர் காட்பாடி காந்தி நகர் பகுதியில் தனது கணவருடன் வசித்து வந்தார்.

பாரதியின் கணவர் ராஜ்குமார் காட்பாடி பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் (டிசம்பர் 4) காட்பாடி அருகே பாரதி ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார். அவருடைய உடலை போலீசார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறை நடத்திய விசாரணையில் பாரதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழகம்

To Top