தமிழகம்
ஒடிசாவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய திமுக எம்எல்ஏக்கள்
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் 100வது பிறந்தநாள் இன்று காலை விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தில் கலைஞர் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
கலைஞர் திருவருவ படத்திற்கு விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உள்ளிட்ட திமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
இதனை தொடர்ந்து ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்த 288 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திமுக எம்எல்ஏக்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி தங்கள் துக்கத்தை அனுசரித்தனர்.
You must be logged in to post a comment Login