Connect with us

Raj News Tamil

கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட திமுக! – எடப்பாடி பழனிசாமி

தமிழகம்

கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட திமுக! – எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த திண்டமங்கலத்தில் இன்று அதிமுக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொண்டர்கள் சூழ இரட்டை மாட்டு வண்டியை ஓட்டி கொண்டு விழா மைதானத்திற்கு வந்தார்.

பின்னர் பொங்கல் விழாவில் உரையாற்றிய அவர், “தை பிறந்தாள் வழி பிறக்கும் என்பதை போல் இந்த ஆண்டு மக்களுக்கு நல்வழி பிறக்கும். ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகாலத்தில் திமுக மக்களுக்கு நன்மை செய்யாமல் கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளனர். கொள்ளையடித்த அமைச்சர்கள் பலர் சிறை சென்றுவிட்டனர். மேலும் சிலரும் சிறை செல்ல உள்ளனர்.

அதிமுக ஆட்சியில் மக்களுக்கு முத்து முத்தான திட்டங்கள் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி காலத்தில் புதிய திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. கொரோனா பேரிடர் கால சோதனையை கூட சாதனைகளாக மாற்றி மக்களுக்கு 11 மாதங்கள் ரேஷன் கடைகளில் அரிசி, பாமாயில் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போது திமுக ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்குவதை நிறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.

கஜா, வர்தா புயலால் கடுமையான சேதத்திலும் மக்களை காப்பற்றினோம். மிக்ஜாம் பெருமழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகூட கிடைக்கவில்லை. அதிமுகவை பொறுத்தவரை திட்டமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களை காப்பற்றினோம்.” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

More in தமிழகம்

To Top