அரசியல்
அண்ணாமலையை பார்த்தால் சிரிப்பு சிரிப்பா வருது – பங்கமாய் கலாய்த்த ஆர்.எஸ் பாரதி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவின் ஊழல் பட்டியல்களை வெளியிட்டார். இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசியதாவது : அண்ணாமலை ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட தெரிவிக்கவில்லை. பொதுவாக நான் சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் உள்ள நகைச்சுவையை பார்த்து சிரிப்பேன். அதுபோலத்தான் இன்று அண்ணாமலை குற்றச்சாட்டுகளை பார்த்தால் சிரிப்புதான் வருவதாகவும், அவர் எப்படி ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தார் என தோன்றுகிறது என விமர்சனம் செய்தார்.
அண்ணாமலை ரஃபேல் வாட்ச் பில் கொடுக்காமல் ஏதோ ஒரு சீட்டை காட்டி சீட்டிங் செய்துள்ளதாகவும் ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார். திமுகவை பொறுத்தவரை நாங்கள் எதற்கும் பயந்தவர்கள் இல்லை, இன்று ஸ்டாலின் தேசிய தலைவராக மாறி உள்ளதாகவும், அண்ணாமலை எண்ணம் நிறைவேறாது என்று பேசிய அவர் ஆருத்ரா வழக்கில் நிச்சயம் அவர் உள்ளே போவார் என ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login