Connect with us

Raj News Tamil

செந்தில் பாலாஜியை திமுகவினர் பார்த்தால் அவருக்கு அட்டாக் வரும் – பொன் ராதா கிருஷ்ணன் பரபரப்பு பேச்சு

அரசியல்

செந்தில் பாலாஜியை திமுகவினர் பார்த்தால் அவருக்கு அட்டாக் வரும் – பொன் ராதா கிருஷ்ணன் பரபரப்பு பேச்சு

மத்தியில் பாஜக மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கன்னியாகுமரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடியினால் இந்தியாவில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டதாக பேசினார். அடிதட்டு மக்களும் பயன்பெறும் வகையில் பிரதமர் மோடி எண்ணற்ற சாதனைகளை புரிந்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தற்பொழுது அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை ஒரு உயிர் என கருத வேண்டும். அவரை திமுகவினர் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு பார்த்தால் செந்தில் பாலாஜிக்கு அட்டாக் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top