தமிழகம்
அரசுக்கு சொந்தமான மின் வயர்களை திருடிய திமுக இளைஞரணி அமைப்பாளர் கைது..!
சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான மின் ஒயர்களை திருடியதாக திமுக இளைஞரணி அமைப்பாளர் அலெக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
8 வருடமாக திமுக இளைஞரணி அமைப்பாளர் அலெக்ஸ் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த அலெக்சாண்டர் மீது திருவள்ளூர் மாவட்டம் புள்ளரம்பாக்கம் ஊத்துக்கோட்டை பெரியபாளையம் ஆகிய பகுதிகளில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login