விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக்செல்வன்,சரத்குமார் இணைந்து நடித்த படம் போர்தொழில். க்ரைம் திரில்லரை மையமாக வைத்து வெளிவந்த இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் இந்த படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் அசோக்செல்வன் , நான் நடித்த ஒரு சில படங்கள் நல்ல அங்கீகாரம் கிடைத்தாலும் அவை வசூல் ரீதியாக வெற்றி அடையவில்லை. அப்போது நல்ல படம் தான் நடிக்கிறோமா? இல்லையா? என்ற சந்தேகம் வந்தது. இப்போது அதற்கு நல்ல பதிலாக போர்தொழில் அமைந்துள்ளது என்று கூறினார்.
மேலும் “உன் வேலையை சரியாக செய்தால் உனக்கான மரியாதை தானாக வரும்” என்றும் அந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.