அரசியல்
மோடிக்கு வாக்களிப்பேன் என்று சொன்னால் சோறு போடாதீங்க – அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது : குடும்பத்தில் உள்ள ஆண்கள் பா.ஜ.க.விற்கு ஆதரவளிக்காமல், ஆம் ஆத்மிக்கு ஆதரவளிக்குமாறு செய்ய வேண்டியது பெண்களின் பொறுப்பாகும். பிரதமர் மோடியின் பெயரை உச்சரிக்கும் ஆண்களை உங்களால் மட்டுமே மாற்ற முடியும். உங்கள் கணவர் பிரதமர் மோடிக்கு வாக்களிப்பதாகச் சொன்னால், நீங்கள் அவருக்கு இரவு உணவை வழங்க மாட்டேன் என்று கூறுங்கள்.
உங்கள் கணவர் ஆம் ஆத்மியை ஆதரிப்பதாக சத்தியம் செய்யச் சொல்லுங்கள். ஒவ்வொரு கணவனும் தன் மனைவி சொல்வதைக் கேட்க வேண்டும், இல்லையா? மேலும் தன் மனைவியின் மீது கணவன் சத்தியம் செய்துவிட்டால், அந்த சத்தியத்தை அவர் பின்பற்ற வேண்டியவர் ஆவார் என கெஜ்ரிவால் தெரிவித்தார்.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)