”இஷ்டத்துக்கு பேசாதீங்க” மயில்சாமி மகன் வேதனை..!

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் மயில்சாமி, கடந்த 19-ஆம் தேதி அன்று மாராடைப்பு காரணமாக காலமானார். இவரது இழப்பு சினிமாத்துறைக்கு மட்டுமல்லாது, அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் மயில்சாமி மரணம் குறித்து, அவரது மகன் யுவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில் தந்தை இறந்து 2-நாள் கழித்து தான் செல்போனை பார்த்தாகவும், அப்போது அப்பாவின் மரணம் குறித்து தவறான தகவல்கள் வெளியாகி வருவதாகவும் கூறினார். பின்னர் சிவராத்திரி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அப்பா, மூச்சு விட சிரமப் பட்டார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். ஆனால் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர் என்றார். மேலும் இது போன்று தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் வேதனையோடு பேசினார்.

RELATED ARTICLES

Recent News