அரசியல்
இரட்டை வேடம் போடுவது தெரியாதா..! அழைப்பு விடுத்த முதல்வர் புறக்கணித்த இபிஎஸ்..!
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதி ஏழையினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிட கடந்த 07-ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் எதிர்த்து அறிக்கை வெளியிட்டனர்.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு வருகின்ற நவம்பர் 12-ஆம் தேதி, 10 சதவீத உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்நிலையில் அதிமுக அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. மேலும் 10 சதவீதம் இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டியுள்ளது.
You must be logged in to post a comment Login