கோவையில் வெப்பம் உயர திராவிடக் கட்சிகளே காரணம்: அண்ணாமலை!

குளமையான இருந்த கோவையில் 2 டிகிரி வெப்பம் உயர திராவிடக் கட்சிகளே காரணம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, “பணம் செலவிட மாட்டேன் என நான் பேசியதை இபிஎஸ் முழுமையாக கேட்கவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொள்ளையடித்தவர்கள் என்னை விமர்சிக்க கூடாது. டீ கூட அடுத்தவர் பணத்தில் குடிப்பவர் இபிஎஸ்.

10 ஆண்டுகள் அமைச்சராக இருந்து மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் வளர்ச்சியா?

குளமையான இருந்த கோவையில் 2 டிகிரி வெப்பம் உயர திராவிடக் கட்சிகளே காரணம்.

ஏப்ரல் 10-க்கு பிறகு திமுக – அதிமுக பங்காளி கட்சிகள் ஒன்று சேர்வார்கள். தேர்தலின் போது என்னை தோற்கடிக்க இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடுவார்கள்.” என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News