Connect with us

Raj News Tamil

சென்னையை அச்சுறுத்தும் போதை ஊசி – மேலும் ஒரு இளைஞர் பலி!

தமிழகம்

சென்னையை அச்சுறுத்தும் போதை ஊசி – மேலும் ஒரு இளைஞர் பலி!

சென்னை வியாசர்பாடி அடுத்த என்.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தீபக். மெக்கானிக்காக பணியாற்றி வந்த இவர், பணிக்கு செல்லாமல் கடந்த 3 மாதங்களாக நண்பர்களுடன் ஊற்றி வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், நேற்று பிற்பகல் 3 மணியளவில் நண்பர்களுக்கு போன் செய்து என்னை உடனடியாக மருத்துவமனையில் அனுமதியுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, அவரது நண்பர்கள் மயங்கிய நிலையில் இருந்த தீபக்கை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். தீபக்கைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் போதை ஊசி பயன்படுத்தியதால் இறந்ததாகவும் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீபக் மயங்கிக்கிடந்த இடத்தில் இருந்து இரண்டு போதை ஊசிகளை கைப்பற்றினர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் சென்னை கொடுங்கையூர், அண்ணாசாலை பகுதியில் போதை ஊசி பயன்படுத்தியதால் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். தற்போது மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top