போதைப் பொருள் விற்பனை: முன்னாள் டிஜிபி மகன் கைது!

சென்னை நந்தம்பாக்கத்தில் கொக்கைன் போன்ற போதைப்பொருள் விற்பனை செய்வதாக புனித தோமையர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் புனித தோமையார் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத் என்பவரின் மகன் அருண் (40) மற்றும் அவருடைய நண்பர்கள் மெகலன் (42), நைஜீரியா நாட்டை சேர்ந்த ஜான் எஸி (39) ஆகியோர் போதைப்பொருட்களை பயன்படுத்திக் கொண்டு விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த மூன்று பேரையும் நேற்று (அக்.24) போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 3.8 கிராம் கொக்கைன் 1,02,000 ரூபாய் ரொக்கம் இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிஜிபியாக இருந்த ரவீந்திரநாத் என்பவருடைய மகன் அருண் என்பது தெரியவந்துள்ளது.

ரவீந்திரநாத் அப்பொழுது நான்கு மாதங்களே டிஜிபி ஆக இருந்த நிலையில் அவர் மீது புகார்கள் அதிகமாக எழப்பட்ட நிலையில் அப்போதிய தமிழக அரசு அவரை தற்காலிகமாக பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News