மதுபோதையில் கடலில் குளிக்க சென்ற ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு!

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கடலில் மிதப்பதாக போலீசார்க்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்த போது புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகர் மெயின் தெருவை சேர்ந்த சத்தியநாதன் (42) என தெரியவந்தது.

மது போதையில் இருந்து சத்தியநாதன் தனது நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற போது கடல் அலையில் மூழ்கி உயிரிழந்தாக தெரிய வந்தது.

இச்சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

RELATED ARTICLES

Recent News