Connect with us

Raj News Tamil

காவல் நிலையத்திற்குள் நுழைந்து தீக்குளிக்க முயன்ற போதை ஆசாமி

தமிழகம்

காவல் நிலையத்திற்குள் நுழைந்து தீக்குளிக்க முயன்ற போதை ஆசாமி

சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவா. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு கிழக்கு தாம்பரம் அந்தோணியர் தெரு பகுதியைச் சேர்ந்த மஹாலக்ஷ்மி என்ற பெண்ணுடன் 13 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் அடிக்கடி குடித்து விட்டு வருவதால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக தனது பிள்ளைகளை அழைத்து கொண்டு கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு வந்து விட்டார்.

இந்த நிலையில் தாம்பரம் காவல் நிலையத்திற்கு நேற்று இரவு குடிபோதையில் வந்த ஜீவா தனது மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தான் கையில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டு தனது மனைவியை சேர்த்து வைக்குமாறு ரகளை ஈடுபட்டுள்ளார்.

இதனை பார்த்த போலீசார் அவரை தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். மது போதையில் இருந்த அவர் தாம்பரம் காவல் நிலையத்திலேயே சோப்பு போட்டு குளித்தார். பின்னர் உடனடியாக அவரை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top