விமானத்தில் இருந்த பெண் பயணி.. திடீரென பெண் மீது சிறுநீர் கழித்த ஆண்.. என்ன தண்டனை தெரியுமா?

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கி, கடந்த நவம்பர் மாதம் 26-ஆம் தேதி அன்று ஏர் இந்திய விமானம் ஒன்று வந்துள்ளது. இதில், பிசினஸ் க்ளாசில் பயணித்த ஆண், மது போதையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், சிறுநீர் கழிக்க சென்ற அந்த நபர், தனது சக பெண் பயணியின் மீதே அசிங்கம் செய்து வைத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணும், மற்ற சில பயணிகளும், அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, உள்மட்ட அளவிலான கமிட்டி ஒன்றை அமைத்து, ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை நடத்தியுள்ளது.

மேலும், அந்த பயணியை விமான பயண தடை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை அரசு தரப்பில் ஏற்றுக் கொண்டால், அந்த நபர் இனிமேல் வாழ்நாள் முழுவதும் விமானத்தில் பயணிக்க முடியாத சூழல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அரசு தரப்பில் இருந்து, எந்த பதிலும் இதுவரை வெளியாகவில்லை..

RELATED ARTICLES

Recent News