Connect with us

Raj News Tamil

டு பிளெசிஸ் அதிரடி… பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றி!

விளையாட்டு

டு பிளெசிஸ் அதிரடி… பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றி!

நடப்பு ஐபிஎல் தொடரின் 52-வது போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

குஜராத் அணியை பொறுத்தவரை ஷாருக்கான் (37 ரன்கள்), தெவாட்டியா (35 ரன்கள்), மில்லர் (30 ரன்கள்) ஆகியோர் மட்டும் குஜாரத் அணிக்கு அதிகபட்ச ரன்கள் எடுத்தனர்.

பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக சிராஜ், யாஷ் தயாள், வைஷாக் விஜயகுமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் டு பிளெசிஸ், அதிரடியில் மிரட்டினார். 18 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார். விராட் கோலி நிதானமாக விளையாடினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தது.

டு பிளெசிஸ் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வில் ஜேக்ஸ் (1), படிதார் (2), மேக்ஸ்வெல் (4), கிரீன் (1) அடுத்தடுத்து நடையை கட்டினர். சிறிது நேரத்தில் கோலியும் (42) வெளியேற 117 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

எனினும் கார்த்திக் மற்றும் ஸ்வப்னில் சிங் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். இறுதியில் பெங்களூரு அணி 13.4 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

குஜராத் தரப்பில் ஜோசுவா லிட்டில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top