அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யார்? பரிந்தரை செய்த டி.ஒய்.சந்திரசூட்!

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தற்போது டி.ஒய்.சந்திரசூட் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக் காலம், வரும் நவம்பர் மாதத்துடன் முடிய உள்ளது.

இதன்காரணமாக, அடுத்த தலைமை நீதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், மரபுப்படி, ஓய்வுபெறும் தருவாயில் உள்ள டி.ஒய்.சந்திரசூட், உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவின் பெயரை உச்ச நீதி மன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகப் பரிந்துரைத்துள்ளார்.

நீதிபதி கன்னாவின் பெயரை முன்மொழிந்து மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி கடிதம் எழுதியுள்ளார். சந்திரசூட்டின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக கன்னா பதவியேற்பார்.

2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அன்று, டெல்லி உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதி கண்ணா உயர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News