Connect with us

Raj News Tamil

இனி ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்..!!

தமிழகம்

இனி ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி மூலம் ஆஜராகியிருந்தனர்.

ஊட்டிக்கு தினமும், ஆயிரத்து 300 வேன்கள் உள்பட 20 ஆயிரம் வாகனங்கள் வருகை தருவதாக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் இத்தனை வாகனங்கள் சென்றால் நிலைமை மோசமாகும் எனவும், உள்ளூர் மக்கள் நடமாட இயலாது எனவும், சுற்றுச்சூழலும், விலங்குகளும் பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டனர்.

இது தொடர்பாக ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம். ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை, இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

அதன் படி மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்தக்கோரி நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்க வேண்டும் எனவும் உள்ளூர் மக்களுக்கு விலக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இ – பாஸ் நடைமுறை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்களை கொடுக்க வேண்டும் எனவும், இ – பாஸ் வழங்குவதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top