தமிழகம்
அரையாண்டு தேர்வை ஒத்திவைக்க கல்வித்துறை முடிவு
மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ந்து 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்ட்டது. தொடர்ந்து நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 7ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வருவதால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வை ஒத்தி வைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.