தமிழகம்
தீயில் எரிந்து நாசமான எலக்ட்ரிக் பைக்…3 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!!
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அழகுவேல் என்பவர் தனது இருசக்கர பேட்டரி வாகனத்திற்கு சார்ஜ் போட்டுவிட்டு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது இருசக்கர பேட்டரி வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது
அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். ஆனால், அதற்குள் அவரது பேட்டரி வாகனம் முழுவதுமாக எரிந்து நாசமானது. இதன் காரணமாக இருசக்கர வாகனம் மற்றும் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களும் தீக்கிரையானது. இது தொடர்பாக மங்களமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.