Connect with us

Raj News Tamil

டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

தமிழகம்

டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உதவியாளர் வீடு உள்பட 4 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

டாஸ்மாக் மேற்பார்வையாளராக இருக்கும் முத்து பாலன் என்பவர் வீட்டில் இன்று காலை 6 மணிக்கு காரில் 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் அமலாக்கத்துறையினர் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இவருடைய வீட்டின் முன்பு அதிவிரைவுபடை போலீசார் 10 பேர் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் முன்பு யாரும் கூடிவிடாத வகையிலும், உள்ளே யாரும் நுழையாத வண்ணமும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

More in தமிழகம்

To Top