பொன்முடி வீட்டில் 81.7 லட்ச ரூபாய் பறிமுதல் செய்த அமலாக்கத்துறை

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று (ஜூலை 17) அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சென்னை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் திங்கள்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு அமைச்சர் பொன்முடியை கூறியதை அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவுச் செய்துக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து இன்று (ஜூலை 18) மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி இன்று இரண்டாவது நாளாக பொன்முடி விசாரணைக்கு ஆஜரானார்.

இந்நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் 81.7 லட்ச ரூபாயை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. மேலும் ரூ.41.9 கோடி வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News