தமிழகம்
பொன்முடி வீட்டில் 81.7 லட்ச ரூபாய் பறிமுதல் செய்த அமலாக்கத்துறை
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று (ஜூலை 17) அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சென்னை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் திங்கள்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு அமைச்சர் பொன்முடியை கூறியதை அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவுச் செய்துக் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து இன்று (ஜூலை 18) மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி இன்று இரண்டாவது நாளாக பொன்முடி விசாரணைக்கு ஆஜரானார்.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் 81.7 லட்ச ரூபாயை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. மேலும் ரூ.41.9 கோடி வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளது.