சினிமா
“முன்னாள் காதலரின் கொடூர தாக்குதல்” நடிகையின் புகைபடத்தால் அதிர்ச்சி..!
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அனிகா விக்ரமன். எங்க பாட்டன் பார்த்தியா, விஷமக்காரன் போன்ற படங்களில் நடித்து வரும் இவர், தனது முன்னாள் காதலன் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அனிகா, தனது முன்னாள் காதலன் அனூப் பிள்ளை தன்னை துன்புறுத்தி வந்ததாகவும், இது குறித்து பெங்களூரு போலீசில் புகார் அளித்தேன் என்றும், முதலில் என்னை சென்னையில் வைத்து அடித்ததாகவும், அன்று என்னிடம் அனூப் கெஞ்சி அழுததால் நான் புகார் அளிக்கவில்லை என்று வருத்ததுடன் பேசியுள்ளார்.
மேலும் ஹைதரபாத்திற்கு செல்லும் போது என்னுடய செல்போனை ஆப் செய்து விட்டு, முகத்தில் கடுமையாக தாக்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இவர், அவனுடைய கொடுமைகளை மன்னிக்க முடியாது என்றும், தற்போது நியூயார்க்கில் தலைமறைவாக உள்ளார் என்றும் பதிவிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login