தமிழகம்
முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் மருத்துவமனையில் அனுமதி !
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளருமான சி.விஜயபாஸ்கர் விராலிமலை அருகே உள்ள இலுப்பூரில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக அவருக்கு லேசான காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியானது.
இந்நிலையில் , அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகம் பரவி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித்தலைவா்களும் தமிழ்நாடு அரசை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.