Connect with us

Raj News Tamil

பாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி…கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர்

அரசியல்

பாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி…கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர்

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த தலைவருமான பிரேந்தர் சிங் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். ஹரியாணாவை சேர்ந்த பிரேந்தர் சிங் 40 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்து பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு பாஜகவின் அப்போதைய தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமாகப் போவதாய் பிரேந்தர் சிங் அறிவித்துள்ளார்.

அண்மையில் பிரேந்தர் சிங்கின் மகன் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். மூத்த தலைவர்கள் பலரும் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து வருவதால் பாஜக மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top